வவுனியாவில் தொடர் மழை காரணமாக 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. பெய்துவரும் மழையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 3 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 66 பேரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் 3 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வவுனியா மாவட்டத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.