கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன்

IMG 0286
IMG 0286

இராணுவத்தினருடைய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.11.2021இன்று  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்உள்ளிட்டவர்களும்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.