வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவிக்கு நேற்றையதினம் திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இதன்போது குறித்த மாணவி நான்கு மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மாணவியிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதர்பனிக்கர் குளம் பகுதியை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையான 32 வயது குடும்பஸ்தரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.