ஏர்முனை மடங்கிலும்,பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும்- ஊடகவியலாளராது தாக்குதலுக்கு மு.முகுந்தகஜன் கண்டனம்

IMG 20211127 WA0042
IMG 20211127 WA0042

முள்ளிவாய்கால்  பகுதியில் இன்று முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டடையினை வன்மையாக கண்டிப்பதுடன் கடந்த காலங்களிலும் பல சந்தர்பங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையிலும் பல தடவைகள் கண்டனப்பிரோரணைகள் நிறைவேற்றியுள்ளேன்.

எனவே தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக சுதந்திரத்தின் மீதும் இடம்பெறுகின்ற வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

ஒரு நாட்டில் ஏர்முனை மடங்கிலும்,பேனா முனை முடங்கினாலும், நாடு கெட்டுவிடும் என்பார்கள
இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்குதலுக்கு உள்ளானதை வன்மையாக கண்டிக்கின்றேன்.என தெரிவித்துள்ளார்