இந்து சமுத்திர மாநாட்டில் டிசம்பர் 4 இல் கோட்டாபய உரை!

gotta5
gotta5

இந்து சமுத்திர சம்மேளனத்தின் ஆரம்ப மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார் என்று அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்து சமுத்திர சம்மேளன மாநாடு ஐக்கிய அரசு இராஜ்ஜியத்தின் தலைநகரான அபுதாபியில் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 47 நாடுகள் பங்கேற்கும் இம் மாநாட்டில் ஆரம்ப உரையை நிகழ்த்துமாறு எமது ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் 4 ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றுவார்” – என்றார்.