இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று காலை மன்னார் பசார் பகுதியில் ஆரம்பமானது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
குறித்த கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கு கையளிக்கப்படவுள்ளது.
இதில் மன்னார் மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கையெழுத்து பெறப்படவுள்ளதுடன் மனித உரிமை தினமான எதிர்வரும் நான்காம் திகதி உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.