முள்ளியவளை அம்பாள் முன்பள்ளி கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரின் மனித வலுகொண்டு கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், 59 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சூரிய பண்டார கரைதுரறைப்பற்று பிரதேச செயலாளர் கரைதுபைற்று பிரதேச சபை தவிசாளர் கிராம அலுவலகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
பாடசாலை சிறுவர்களின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து கட்டிடம் பெயர் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கான புத்தக பைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.