வவுனியாவில் நாளை மின்தடை!

Current 3 850x460 acf cropped
Current 3 850x460 acf cropped

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 04 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும். வவுனியா பிரதேசத்தில் ஆச்சிபுரம், ஆசிகுளம், எல்லப்பர் மருதங்குளம், எல்லப்பர் மருதங்குளம் கோவிலடி, கற்குளம் (சிதம்பரபுரம்), கோமரசங்குளம்மாதா கோவிலடி, மகா மயிலங்குளம், மதுராநகர், கல்நாட்டினகுளம், பெரிய கோமரசங்குளம், சமணங்குளம், சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .