இலங்கையர் கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் அதிருப்தி!

imran khan 1 1
imran khan 1 1

பாகிஸ்தான் – சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவரது ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.