மன்னாரில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி

vaccine reuters1
vaccine reuters1

மன்னார் – நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சைனோபாம் அல்லது பைஸர் தடுப்பூசிகளை பெற்று மூன்று மாதம் கடந்துள்ளவர்களுக்கு, இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் வங்காலை புனித ஆனாள் ஆலய வளாகத்திலும், 7ஆம் திகதி டிலாசாலே கல்லூரியிலும், நானாட்டன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், முற்பகல் 8 மணி முதல் மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதியில் மூன்றாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.