மட்டு ஓட்டமாவடியில் 596 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

WhatsApp Image 2021 12 05 at 11.37.17
WhatsApp Image 2021 12 05 at 11.37.17

மட்டக்களப்பு  வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள ஓட்டமாவடியில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரி ஒருவரை 595 கிராம் கேரள கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை (04) கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு ஓட்டமாவடி பகுதிக்கு கேரளா கஞ்சாவை எடுத்து வந்த கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரினர் காவல்துறையினருடன் இணைந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 595 கிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பாருக் நானா வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகால கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.