இந்தியாவிடமிருந்து மேலும் 1.4 பில்லியன் டொலரைக் கடனாகப் பெறும் இலங்கை!

11 2
11 2

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவிடம் இருந்து மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்நிதியை பரிமாற்று முறைமையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி தற்போது இந்தியாவினால் வழங்கப்படவுள்ள 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக பெறப்படவுள்ளது.

அதற்கமைய, குறித்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தவுடன் அதன் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத முறையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களுக்கு எதிரான சட்டத்தைக் கடுமையாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.