மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை 950,000 ஐ கடந்தது

163158 corona vaccine reuters1
163158 corona vaccine reuters1

நாட்டில் மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசியை பெற்று கொண்டவர்களின் எண்ணிக்கை 950, 000ஐ கடந்துள்ளது.

இதுவரை 956, 946 பேர் கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்றைய நாளில், 19, 633 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 17, 644 பேருக்கு பைசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 868 பேருக்கு பைசர் முதலாம் தடுப்பூசியும், 220 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேநேரம், 201 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 3, 677 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

No photo description available.