இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய 23 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், நவம்பர் முதலாம் திகதி முதல் இன்றுவரையான கடந்த 49 நாட்களில் எரிவாயு தொடர்புடைய 815 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானவை எரிவாயு அடுப்புகள் சார்ந்த வெடிப்பு சம்பவங்களாக பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.