இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து மாவட்ட செயலகத்தை முற்றுகையிட தீர்மானம்!

hongkong city view 4 1
hongkong city view 4 1

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து நாளைய தினம் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்க யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளைய தினம் மீனவர்கள், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.