திருகோணமலை – தோப்பூர் நல்லூர் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த அவர், தேடப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மூதூர் நல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சம்பூர் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.