நடத்துனர் இல்லாத பஸ் சேவை இன்று முதல் ஆரம்பம்!

21 60de79d26adc1
21 60de79d26adc1

பஸ்களில் நடத்துனர் இல்லாமல் பஸ் போக்குவரத்தை முன்னெடுக்கும் புதிய திட்டம் இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தன்னியக்க கட்டண முறையொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் ஏதேனும் நிவாரணம் கிடைக்கும் விதத்திலான கலந்துரையாடல்களை மத்திய வங்கி ஆளுநருடன் நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.