250 கிலோ கிராமுக்கும் அதிக கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

kaithu
kaithu

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு 250 கிலோ கிராமுக்கும் அதிக கேரள கஞ்சாவை கொண்டு செல்ல முயற்சித்த சந்தேக நபர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.