பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

images
images

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்க இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்களுக்கு ஜனவரி 18 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.