கொவிட் தொற்றால் மேலும் 14 பேர் மரணம்!

corona
corona

நாட்டில் மேலும் 14 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,211 ஆக உயர்வடைந்துள்ளது.