ஒமைக்ரொன் திரிபுடன் உலகளாவிய ரீதியில் கொவிட் பரவல் முடிவுக்கு வரலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எப்பாவல அரச வைத்தியசாலையில் 55 மில்லியன் செலவில் உருவாகும் ஆரம்ப மருத்துவப் பிரிவுக்கு இன்று (16) விஜயம் செய்த பின்னர், கொவிட் நான்காவது தடுப்பூசி தொடர்பான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.