யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் நேற்று (16) இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
உந்துருளியில் இரண்டு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த உந்துருளியை செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.