கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்! சந்தேக நபர்கள் மூவர் கைது

1642748734 navatkadu 2
1642748734 navatkadu 2

கடந்த 30.12.2020 அன்று முள்ளியவளை காவற்துறை பிரிவிற்குட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்து

குறித்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்   அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த  சம்பவம்  தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான காவற்துறை குழுவினர் மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

நீண்டகாலத்தின் பின்னர் குறித்த  சம்பவத்துடன்  தொடர்புடையவர்களாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை முள்ளியளை காவற்துறையிர்  கைது செய்துள்ளார்கள்.

20.01.2022 நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நிலையில் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவரின்  மனைவி உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரே இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார்கள்

பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவற்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்