மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்ப தமிழ் கட்சிகள் யாழில் கூடி ஆராய்வு

UNIted nation human rights council
UNIted nation human rights council

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று (16) யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதேநேரம், ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும், – தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ என்ற தலைப்பில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் கூட்டமொன்றும் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்தச் சந்திப்புகள் குறித்து, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.