மட்டு தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டடதொகுதி திறப்பு

champika ranavakka
champika ranavakka

மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு நகரிலில் ஆறரை கோடி செலவில் நிருமாணிக்கப்பட்ட தனியார் பேரூந்து நிலையத்தின் புதிய கட்டடதொகுதி இன்று காலை 10.00 மணியளவில் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் போதிய வசதிகளின்றி பல்வேறு அசௌகாரியங்களுக்கு மத்தியில் இத்தனியார் பேரூந்து நிலையம் செயல்பட்டுவந்திருந்த நிலையில் புதிய கட்டடதொகுதியினால் பல்வேறு பிரயாணிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் செயலாளர்,மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந், திணைக்களத்தலைவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் மேலும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.