முல்லைத்தீவு முறிகண்டி விபத்தில் பிரதேச சபை சாரதி பலி சிற்றூழியர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்
முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த பிரதேச சபை கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் மீது பின் பக்கமாக அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியரான சாரதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதோடு சிற்றூழியர்கள் மூவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்