யாழில் நாளை நடைபெறவிருந்த கண்டனப் பேரணி ஒத்திவைப்பு

leelavathi 300x171 1
leelavathi 300x171 1

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டும், அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது. புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.”

– இவ்வாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது,  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்த முற்பட்ட தாய்மார்கள், வயோதிபப் பெண்கள் மீதுகாவற்துறையினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், நீதி கிடைக்க வேண்டியும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளியை நோக்கிச் செல்லும் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனாலும், நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டும், எமது அன்னையரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் எமது பேரணிக்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.

புதிய திகதி அனைவரும் கலந்து முடிவு செய்து அறிவிக்கப்படும். சிரமத்துக்கு மன்னிக்கவும். தங்கள் ஒத்துழைப்பு தொடர வேண்டும்” – என்றார்.