எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை 0115234234 அல்லது 0115455130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
அதேசமயம் பல பிரதேசங்களில் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.