தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட பண கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரணத்தை வழங்குவதற்கு, புதிய நாணயம் அச்சிடப்படமாட்டாது என்பதுடன், உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் அதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர் நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.