நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்று கொள்கைகளை பேசிக் கொண்டு அரசியல் நடத்த முடியாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்துடனான 15 ஆண்டுகால உறவு முறிந்துவிட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மே தின கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாகவே ஜீவன் தொண்டமான் இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொண்டதாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், தமது தரப்பை விமர்சிக்கும் தகுதி எம்.ஏ.சுமந்திரனுக்கு இல்லை என குறிப்பிட்டார்.