நாடளாவிய ஊரடங்கு சட்டம் நாளை வரை நீடிப்பு

thanimai 1
thanimai 1

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் நாளை புதன்கிழமை (11) காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஊரடங்கு நாளையதினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.