காலி முகத்திடலில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் மரணித்தனர்.
அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.