காலி முகத்திடல் மோதலில் காவல்துறை அதிகாரி உட்பட 2 பேர் பலி!

u9ue90ie
u9ue90ie

காலி முகத்திடலில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் மரணித்தனர்.

அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.