காணாமல் போனோர் குறித்து அமைச்சரவை விசேட தீர்மானம்

02
02

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த காணாமல் போனோரின் உறவினர்கள், தமது சார்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவமான தீர்வினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கத்துடன் கலந்துரையாடி கௌரவான தீர்வினைப் பெற்றுக் கொள்ளத் தயராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விவகாரத்தினை தீராத பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்ற அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்ற ஒரு சிறு பகுதியினரே தொடர்ந்தும் குழப்பங்களை மேற்கொண்டு வருவதாகவும் எடுத்துக் கூறினார்.

குறித்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதனடிப்படையில் கூடிய விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படும் எனவும் அதற்கான குழு ஒன்றினை உடனடியாக அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.