பதவி விலகும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா

saventhira
saventhira

ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி, இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.