வட மாகாணத்தில் இதுவரை 132 வைத்திய அதிகாரிகள் கடமைகள் பொறுப்பேற்பு

kethees 696x392 1 1
kethees 696x392 1 1

வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட 138 வைத்திய அதிகாரிகளில் இதுவரை 132 வைத்திய அதிகாரிகள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளக பயிற்சிகளை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளுக்கு கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 23 வைத்திய அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும், வவுனியா மாவட்டத்திற்கு 22 வைத்திய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்திற்கு 35 வைத்திய அதிகாரிகளும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 31 வைத்திய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் 132 வைத்திய அதிகாரிகள் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.