வவுனியாவில் விற்பனைக்கு வழங்கப்பட்ட எரிவாயுவை பதுக்க முயற்சி:அதிகாரிகளின் தலையீட்டால் விநியோகம்!

IMG20220603100030 01
IMG20220603100030 01

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள எரிவாயுக்கள் விநியோகஸ்தருக்கு வழங்குவதற்கென்று விநியோகிக்கப்பட்ட 20 எரிவாயுக்களையும் விநியோகஸ்தரினால் பதுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை மாவட்ட செயலக அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து காத்திருந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது .

IMG20220603102056 01


வவுனியா பட்டாணிச்சூரில் இன்று (03.06) அதிகாலை முதல் எரிவாயுவை பெற்று கொள்வதற்காக காத்திருந்த மக்களுக்கு வழங்குவதற்கு என்று 20 எரிவாயுக்கள் எடுத்து வரப்பட்டுள்ளது . காத்திருந்த மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து குறித்த எரிவாயுவைப் பதுக்குவதற்கு விநியோகஸ்தரினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது இதையடுத்து அங்கு நீண்டநேரமாக காத்திருந்த மக்கள் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்தகாவற்துறையினர் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் காத்திருந்த மக்களுக்கு 10 மணியளவில் காத்திருப்பு வரிசையின் இலக்கம் பெயர் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டு எரிவாயுக்கள் விநியோகம் செய்து வைக்கப்பட்டது .

IMG20220603102118 01