மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் எரிபொருள் நிலையம் வளாகத்தில் வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
செங்கலடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை காவல்துறயினர் இன்னும் வெளியிடவில்லை.
எனினும், குறித்த சம்பவத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.