சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது!

nevy
nevy

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த போதே இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 34 ஆண்களும், 6 பெண்களும் 7  சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்