எரிபொருளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

kaithu
kaithu

எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான எரிபொருளை வைத்திருந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் சம்மாந்துறை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட மானம் வீதி, கோவில் பகுதிக்கு அருகில் வைத்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மாத்தறை, வெரடுவ பகுதியைச் சேர்ந்த சுமார் 51 வயதுடையவர் என்பதுடன், கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 2,160 லீற்றர் மண்ணெண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கல்முனை காவல் நிலையத்தில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.