கேகாலையில் நேற்று இரவு 10.45 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்றும் மூன்று உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு – கண்டி வீதியின் ரன்வல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
வேனை செலுத்தி சென்றவர், நித்திரை காரணமாக மூன்று உந்துருகளையும் மோதியபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.