வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் சடலம் மீட்பு!

c86161f2 d79a 4f69 8597 cbd3c4b40d3b
c86161f2 d79a 4f69 8597 cbd3c4b40d3b

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்தனர்.


இன்று காலை தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள்  அது தொடர்பில் வவுனியா காவற்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் சடலத்தை மீட்டதுடன், அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


நேற்றைய தினம் இரவு பயணித்த புகையிரத்த்தில் மோதுண்டு இரு கால்களும் துண்டிக்கப்பட்டதனால், கடும் இரத்த ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் மரணித்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயது மதிக்கத்தக்க நபராவார். இதேவேளை, சடலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நிறுத்தப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் காவற்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.