முட்டையால் நீதிமன்றம் செல்லவுள்ள 80 பேர்!

nattukozhi egg
nattukozhi egg

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த 80 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முட்டை ஒன்றிற்கு 50 ரூபாவினை கட்டுப்பாட்டு விலையாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் முட்டை ஒன்று 60 முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதனால் நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நுகர்வோரின் முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல தெரிவித்தார்.