11 வாள்களுடன் 22 வயதான இளைஞன் கைது

1663126383 vaal 2
1663126383 vaal 2

வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட் துணவி பகுதியில் நேற்று (13) இரவு 8.00 மணி அளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவில் ஒன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர், 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவை தமது பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரின் தந்தையே ஆலயத்தில் பூசைகளில் ஈடுபடுவர். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.