எதிர்வரும் 19ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், அன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.