வவுனியாவில் சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட போது பூவரசங்குளம் காவற்துறையினரால் மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (24.09) அதிகாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூவரசங்குளம் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தம்பனை பகுதியில் இருந்து வவுனியாவிற்கு கப் ரக வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட மரக்குற்றிகளை பம்பைமடு பகுதியில் வைத்து பூவரசங்குளம் காவற்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.
காவற்துறையினர் பின்தொடர்வதை கண்ட வாகன சாரதி பம்பைமடு பகுதியில் வாகனத்தை விட்டு தப்பியோடிய நிலையில் வாகனத்தில் 6 மரகுற்றிகளுடன் பூவரசங்குளம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.