இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை ஊழியர்கள் இன்று (29) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறுவன் ஒருவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்திய இ.போ.ச சாரதி மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சாரதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்த காவற்துறையினர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
காவற்துறையினரின் இச் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று யாழ் பிராந்திய சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எனினும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் இன்று வடக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாகாணத்தின் இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள் இவ் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா சாலையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.