இராணுவப் பயிற்சியை மேம்படுத்துவது தொடர்பில் சீன அதிகாரியுடன் இராணுவத் தளதிபதி கலந்துரையாடல்!

army
army

இராணுவப் பயிற்சியை மேம்படுத்துவது குறித்து இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி சூ ஜியான்வெல் மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துரையாடியுள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயம் தொடர்பாகவும், பயிற்சிநெறிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சீன பாதுகாப்பு இணைப்பதிகாரியினால் முன் வைக்கப்பட்ட புரிந்துணர்வுக்கும், ஒத்துழைப்புக்கும் தனது நன்றிகளை தெரிவித்த இராணுவத் தளபதி, சீன இராணுவத்துடன் உறவு முறையை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

இறுதியில் இவர்களது சந்திப்பை நினைவுபடுத்தும் முகமாக இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.