பெண்களின் பாதுகாப்புக்காக ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள்!

20221216 094114 1
20221216 094114 1

பாதுகாப்பான பயணத்திற்கு பாலியல் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனும் தொனிப்பொருளில் பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. 

20221216 094114


மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பெண்கள் அபிவிருத்தி குழுவின் மற்றும் வவுனியா மாவட்ட செயலகத் இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் செயற்பாடு வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. 

20221216 093607


மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி, பொலிஸார் உட்பட பலரும் கலந்து கொண்டு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தனர்.