18 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதிப்பு

vilakam
vilakam

அஹுங்கல்ல, வெல்லபட பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு ஜனவரி  23ஆம் திகதி  துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவரைக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு நேற்று (19) பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் 29 நவம்பர் 2021 அன்று உயிரிழந்த நிலையில், மற்றைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.