வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழரசுக்கட்சி நேற்றைய தினம் (20) தாக்கல் செய்தது.
கட்சியின் வவுனியா முக்கியஸ்தர் நா.சேனாதிராஜா தலைமையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் சகிதம் தமது வேட்பு மனுவை நேற்று கையளித்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளநிலையில் வவுனியா மாநகரசபையில் போட்டியிடுவதற்காக குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது